திருவருட்பா  29. பிரிவாற்றாமை

போக  மாட்டேன்  பிறரிடத்தே  பொய்யிற்  கிடந்து  புலர்ந்துமனம் 
வேக  மாட்டேன்  பிறிதொன்றும்  விரும்ப  மாட்டேன்  பொய்யுலகன் 
ஆக  மாட்டேன்  அரசேஎன்  அப்பா  என்றன்  ஐயாநான் 
சாக  மாட்டேன்  உனைப்பிரிந்தால்  தரிக்க  மாட்டேன்கண்டாயே. 
1
செல்ல  மாட்டேன்  பிறரிடத்தே  சிறிதுந்  தரியேன்  தீமொழிகள் 
சொல்ல  மாட்டேன்  இனிக்கணமுந்  துயர  மாட்டேன்  சோம்பன்மிடி 
புல்ல  மாட்டேன்  பொய்யொழுக்கம்  பொருந்த  மாட்டேன்  பிறஉயிரைக் 
2
வெறுக்க  மாட்டேன்  நின்றனையே  விரும்பிப்  பிடித்தேன்  துயர்சிறிதும் 
பொறுக்க  மாட்டேன்  உலகவர்போல்  பொய்யிற்  கிடந்து  புரண்டினிநான் 
சிறுக்க  மாட்டேன்  அரசேநின்  திருத்தாள்  ஆணை  நின்ஆணை 
மறுக்க  மாட்டேன்  வழங்குவன  எல்லாம்  வழங்கி  வாழியவே. 
3
கருணைப்  பெருக்கே  ஆனந்தக்  கனியே  என்னுட்  கலந்தொளிரும் 
தருணச்  சுடரே  எனைஈன்ற  தாயே  என்னைத்  தந்தோனே 
வருணப்  படிக  மணிமாலையே  மன்றில்  நடஞ்செய்  வாழ்வேநற் 
பொருண்மெய்ப்  பதியே  இனித்துயரம்  பொறுக்க  மாட்டேன்  கண்டாயே. 
4
திண்ணமும்  பழுத்த  சிந்தையிலே  தித்தித்  துலவாச்  சுயஞ்சோதி 
வண்ணம்  பழுத்த  தனிப்பழமே  மன்றில்  விளங்கு  மணிச்சுடரே 
தண்ணம்  பழுத்த  மதிஅமுதே  தருவாய்  இதுவே  தருணம்என்றன் 
எண்ணம்  பழுத்த  தினிச்சிறியேன்  இறையுந்  தரியேன்  தரியேனே. 
5
நாட்டுக்  கிசைந்த  மணிமன்றில்  ஞான  வடிவாய்  நடஞ்செயருள் 
ஆட்டுக்  கிசைந்த  பெருங்கருணை  அப்பா  என்றன்  அரசேஎன் 
பாட்டுக்  கிசைந்த  பதியேஓர்  பரமா  னந்தப்  பழமேமேல் 
வீட்டுக்  கிசைந்த  விளக்கேஎன்  விவேகம்  விளங்க  விளக்குகவே. 
6
வேதந்  தலைமேற்  கொளவிரும்பி  வேண்டிப்  பரவு  நினதுமலர்ப் 
பாதந்  தலைமேற்  சூட்டிஎனைப்  பணிசெய்  திடவும்  பணித்தனைநான் 
சாதந்  தலைமேல்  எடுத்தொருவர்  தம்பின்  செலவும்  தரமில்லேன் 
ஏதந்  தலைமேற்  சுமந்தேனுக்  கிச்சீர்  கிடைத்த  தெவ்வாறே. 
7
பொய்விட்  டகலாப்  புலைக்கொடியேன்  பொருட்டா  இரவில்  போந்தொருநின் 
கைவிட்  டகலாப்  பெரும்பொருள்என்  கையிற்  கொடுத்தே  களிப்பித்தாய் 
மைவிட்  டகலா  விழிஇன்ப  வல்லி  மகிழும்  மணவாளா 
மெய்விட்  டகலா  மனத்தவர்க்கு  வியப்பாம்  உனது  மெய்யருளே. 
8
சாமத்  திரவில்  எழுந்தருளித்  தமியேன்  தூக்கந்  தடுத்துமயல் 
காமக்  கடலைக்  கடத்திஅருட்  கருணை  அமுதங்  களித்தளித்தாய் 
நாமத்  தடிகொண்  டடிபெயர்க்கும்  நடையார்  தமக்கும்  கடையானேன் 
ஏமத்  தருட்பே  றடைந்தேன்நான்  என்ன  தவஞ்செய்  திருந்தேனே. 
9
பாதி  இரவில்  எழுந்தருளிப்  பாவி  யேனை  எழுப்பிஅருட் 
சோதி  அளித்தென்  உள்ளகத்தே  சூழ்ந்து  கலந்து  துலங்குகின்றாய் 
நீதி  நடஞ்செய்  பேரின்ப  நிதிநான்  பெற்ற  நெடும்பேற்றை 
ஓதி  முடியா  தென்போல்இவ்  வுலகம்  பெறுதல்  வேண்டுவனே. 
10
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com