திருவருட்பா  2. விண்ணப்பக் கலிவெண்பா

அவ்வவ்  விடைவந்  தகற்றி  அருள்தரலால் 
எவ்வெவ்  விடையூறும்  எய்தலிலம்  -  தெவ்வர்தமைக் 
கன்றுமத  மாமுகமுங்  கண்மூன்றுங்  கொண்டிருந்த 
தொன்றதுநம்  முள்ள  முறைந்து. 
1
சொற்பெறுமெய்ஞ்  ஞானச்  சுயஞ்சோதி  யாந்தில்லைச் 
சிற்சபையில்  வாழ்தலைமைத்  தெய்வமே  -  நற்சிவையாந் 
2
தாயி  னுலகனைத்துந்  தாங்குந்  திருப்புலியூர்க் 
கோயி  லமர்ந்தகுணக்  குன்றமே  -  மாயமிகும் 
3
வாட்களமுற்  றாங்குவிழி  மாதர்மய  லற்றவர்சூழ் 
வேட்களமுற்  றோங்கும்  விழுப்பொருளே  -  வாழ்க்கைமனை 
4
நல்வாயி  லெங்கு  நவமணிக்குன்  றோங்குதிரு 
நெல்வாயி  னின்றொளிரு  நீளொளியே  -  செல்வாய்த் 
5
தெழிப்பாலை  வேலைத்  திரையொலிபோ  லார்க்குங் 
கழிப்பாலை  யின்பக்  களிப்பே  -  விழிப்பாலன் 
6
கல்லூர்ப்  பெருமணத்தைக்  கட்டுரைக்கச்  சோதிதரு 
நல்லூர்ப்  பெருமணம்வாழ்  நன்னிலையே  -  சொல்லுந் 
7
தயேந்திர  ருள்ளத்  தடம்போ  லிலங்கும் 
மயேந்திரப்  பள்ளியின்ப  வாழ்வே  -  கயேந்திரனைக் 
8
காயலுறா  தன்றுவந்து  காத்தோன்  புகழ்முல்லை 
வாயிலி  னோங்கு  மணிவிளக்கே  -  மேய 
9
பலிக்காவூர்  தோறும்  பதஞ்சேப்பச்  சென்று 
கலிக்காமூர்  மேவுங்  கரும்பே  -  வலிக்காலில் 
10
பாய்க்காடு  கின்றவொரு  பச்சை  முகில்பரவுஞ் 
சாய்க்காடு  மேவுந்  தடங்கடலே  -  வாய்க்கமையச் 
11
சொல்லவ  னீச்சரங்கு  தோயவும்ப  ராம்பெருமைப் 
பல்லவ  னீச்சரத்தெம்  பாவனமே  -  நல்லவர்கள் 
12
கண்காட்டு  நெற்றிக்  கடவுளே  யென்றுதொழ 
வெண்காட்டின்  மேவுகின்ற  மெய்ப்பொருளே  -  தண்காட்டிக் 
13
கார்காட்டித்  தையலர்தங்  கண்காட்டிச்  சோலைகள்சூழ் 
சீர்காட்டுப்  பள்ளிச்  சிவக்கொழுந்தே  -  பார்காட் 
14
டுருகாவூ  ரெல்லா  மொளிநயக்க  வோங்குங் 
குருகாவூர்  வெள்ளடையெங்  கோவே  -  அருகாத 
15
கார்காழி  னெஞ்சக்  கவுணியர்க்குப்  போதமருள் 
சீர்காழி  ஞானத்  திரவியமே  -  ஓர்காழிப் 
16
பாலற்கா  வன்று  பசும்பொற்றா  ளங்கொடுத்த 
கோலக்கா  மேவுங்  கொடையாளா  -  கோலக்கா 
17
உள்ளிருக்கும்  புள்ளிருக்கு  மோதும்  புகழ்வாய்ந்த 
புள்ளிருக்கும்  வேளூர்ப்  புரிசடையாய்  -கள்ளிருக்கும் 
18
காவின்  மருவுங்  கனமுந்  திசைமணக்கும் 
கோவின்  மருவுகண்ணார்  கோயிலாய்  -  மாவின் 
19
இடைமுடியின்  றீங்கனியென்  றெல்லின்  முசுத்தாவும் 
கடைமுடியின்  மேவுங்  கருத்தா  -  கொடைமுடியா 
20
நன்றியூ  ரென்றிந்த  ஞாலமெலாம்  வாழ்த்துகின்ற 
நின்றியூர்  மேவு  நிலைமையனே  -  ஒன்றிக் 
21
கருப்புன்கூ  ருள்ளக்  கயவர்  நயவாத் 
திருப்புன்கூர்  மேவுஞ்  சிவனே  -  உருப்பொலிந்தே 
22
ஈடூரி  லாதுயர்ந்த  ஏதுவினா  லோங்குதிரு 
நீடூ  ரிலங்கு  நிழற்றருவே  -  பீடுகொண்டு 
23
மன்னியூ  ரெல்லாம்  வணங்க  வளங்கொண்ட 
அன்னியூர்  மேவு  மதிபதியே  -  மன்னர்சுக 
24
வாழ்விக்  குடிகளடி  மண்பூச  லாலென்னும் 
வேழ்விக்  குடியமர்ந்த  வித்தகனே  -  சூழ்வுற்றோர் 
25
விண்ணெதிர்கொண்  டிந்திரன்போன்  மேவிநெடு  நாள்வாழப் 
பண்ணெதிர்கொள்  பாடிப்  பரம்பொருளே  -  நண்ணும் 
26
வணஞ்சே  ரிறைவன்  மகிழ்ந்து  வணங்கும் 
மணஞ்சேரி  நீங்கா  மகிழ்வே  -  மணஞ்சேர்ந்துந்ன் 
27
வாரட்ட  கொங்கை  மலையா  ளொடுங்கொறுக்கை 
வீரட்ட  மேவும்  வியனிறைவே  -  ஓரட்ட 
28
திக்குங்  கதிநாட்டிச்  சீர்கொள்திருத்  தொண்டருளம் 
ஒக்குங்  கருப்பறிய  லூரரசே  -  மிக்கதிரு 
29
மாவளருஞ்  செந்தா  மரைவளருஞ்  செய்குரக்குக் 
காவளரு  மின்பக்  கனசுகமே  -  தாவுமயல் 
30
காழ்கொ  ளிருமனத்துக்  காரிருத்  தோர்மருவும் 
வாழ்கொளி  புத்தூர்  மணிச்சுடரே  -  தாழ்வகற்ற 
31
நண்ணிப்  படிக்கரையர்  நாடோறும்  வாழ்த்துகின்ற 
மண்ணிப்  படிக்கரைவாழ்  மங்கலமே  -  விண்ணினிடை 
32
வாமாம்  புலியூர்  மலர்ச்சோலை  சூழ்ந்திலங்கும் 
ஓமாம்  புலியூர்வாழ்  உத்தமமே  -  நேமார்ந்த 
33
வானாட்டு  முள்ளூர்  மருவுகின்றோர்  போற்றுதிருக் 
கானாட்டு  முள்ளூர்க்  கலைக்கடலே  -  மேனாட்டும் 
34
தேரையூர்ச்  செங்கதிர்போற்  செம்மணிக  ணின்றிலங்கும் 
நாரையூர்  மேவு  நடுநிலையே  -  பாரில் 
35
உடம்பூர்  பவத்தை  யொழித்தருளும்  மேன்மைக் 
கடம்பூர்வாழ்  என்னிரண்டு  கண்ணே  -  தடம்பொழிலில் 
36
கொந்தணவுங்  கார்க்குழலார்  கோலமயிற்  போலுலவும் 
பந்தண  நல்லூர்ப்  பசுபதியே  -  கந்தமலர் 
37
அஞ்சனூர்  செய்ததவத்  தாலப்  பெயர்கொண்ட 
கஞ்சனூர்  வாழுமென்றன்  கண்மணியே  -  அஞ்சுகங்கள் 
38
நாடிக்கா  வுள்ளே  நமச்சிவா  யம்புகலும் 
கோடிக்கா  மேவுங்  குளிர்மதியே  -  ஓடிக் 
39
கருமங்க  லக்குடியிற்  காண்டுமென  வோதும் 
திருமங்க  லக்குடியில்  தேனே  -  தரும 
40
மனந்தாள்  மலரை  மருவுவிப்போர்  வாழும் 
பனந்தாளிற்  பாலுகந்த  பாகே  -  தினந்தாளிற் 
41
சூழ்திருவாய்ப்  பாடியங்கு  சூழ்கினுமா  மென்றுலகர் 
வாழ்திருவாய்ப்  பாடிஇன்ப  வாரிதியே  -  ஏழ்புவிக்குள் 
42
வாய்ஞ்ஞலூ  ரீதே  மருவவென  வானவர்சேர் 
சேய்ஞ்ஞலூர்  இன்பச்  செழுங்கனியே  -  வாஞ்சையுறும் 
43
சீவன்  குடியுறவிச்  சீர்நகரொன்  றேயெனுஞ்சீர்த் 
தேவன்  குடிமகிழ்ந்த  தெள்ளமுதே  -  ஓவில் 
44
மயலூர்  மனம்போல்  வயலிற்  கயலூர் 
வியலூர்  சிவானந்த  வெற்பே  -  அயலாம்பல் 
45
மட்டையூர்  வண்டினங்கள்  வாய்ந்து  விருந்துகொளும் 
கொட்டையூ  ருட்கிளருங்  கோமளமே  -  இட்டமுடன் 
46
என்னம்ப  ரென்னம்ப  ரென்றயன்மால்  வாதுகொள 
இன்னம்பர்  மேவிநின்ற  என்னுறவே  -  முன்னம்பு 
47
மாற்கும்  புறம்பியலா  வாய்மையருள்  செய்யவுளம் 
ஏற்கும்  புறம்பியம்வாழ்  என்னுயிரே  -  மாற்கருவின் 
48
கண்விசைய  மங்கைக்  கனிபோற்  பெறத்தொண்டர் 
எண்விசைய  மங்கையில்வாழ்  என்குருவே  -  மண்ணுலகில் 
49
வைகாவூர்  நம்பொருட்டான்  வைகியதென்  றன்பர்தொழும் 
வைகாவூர்  மேவியவென்  வாழ்முதலே  -  உய்யும்வகைக் 
50
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com